இன்று தமிழகம் வருகிறது கொரோனா தடுப்பூசி !

 

இன்று தமிழகம் வருகிறது கொரோனா தடுப்பூசி !

கொரோன தடுப்பூசி புனேவில் இருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வருவதாக தகவல் வந்துள்ளது.

இன்று தமிழகம் வருகிறது கொரோனா தடுப்பூசி !

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்கும் நோக்கில் இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கான கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் போடப்படவுள்ளது.

இன்று தமிழகம் வருகிறது கொரோனா தடுப்பூசி !

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சீரம் நிறுவனத்திலிருந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. புனே விமான நிலையத்திலிருந்து 8 விமானங்களில் 13 இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது . அந்த வகையில் கொரோன தடுப்பூசி புனேவில் இருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்துக்கு சுமார் 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஜனவரி 16ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு போடப்படுகிறது.