கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள போகிறாரா ரஷ்ய அதிபர்?
உலகளவில் பெரும் அச்சத்தையும் பாதிப்பையும் விளைவித்து வருகிறது கொரோனா நோய்த் தொற்று.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 35 லட்சத்து 52 ஆயிரத்து 625 பேர்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 48 லட்சத்து 81 ஆயிரத்து 239 நபர்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 6 ஆயிரத்து 381 பேர்.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் V எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தன. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் 5 பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியில் முதல் கட்டமாக வயது முதியவர்களுக்கும் முன்கள வீரர்களும் தடுப்பூசி போடும் பணியை ரஷ்ய அரசு தொடங்கி விட்டது.
இந்நிலையில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் V -யை ரஷ்ய அதிபர் போட்டுக்கொள்ள விருக்கிறார் எனும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனாலும் இந்தச் செய்தியை அந்த நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வில்லை.