“ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி” – மதுரையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்!

 

“ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி” – மதுரையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்!

கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்.

“ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி” – மதுரையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிந்த பாடில்லை. இதனால் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனாவை தடுக்க இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று முடிந்தது. பின்னர் நேற்றைய தினம் 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் போடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

“ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி” – மதுரையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்!

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த சூழலில் வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.