“திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 20,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி” – ஆட்சியர் பொன்னையா தகவல்

 

“திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 20,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி” – ஆட்சியர் பொன்னையா தகவல்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 20 ஆயிரத்து 440 சுகாதார பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவர்கள், அங்கன்வாடி மைய அலுவலர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக முதற்கட்டமாக 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. இவை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அலுவலகம், பூந்தமல்லி சுகாதார நிலையம் மற்றும் கச்சூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய 3 இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று தடுப்பூசி வைக்கப்பட்டுள்ள மையங்களை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

“திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 20,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி” – ஆட்சியர் பொன்னையா தகவல்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக அரசு மருத்துவர்கள், அங்கன்வாடி மைய அலுவலர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கு 2 ஆயிரத்து 834 மையங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது வரை 26 ஆயிரத்து 330 நபர்கள் கண்டறியப்பட்டு, அதில் 20 ஆயிரத்து 440 பேருக்கு தடுப்பூசி போடுவது உறுதிசெய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், மீதமுள்ள தடுப்பூசிகள் வந்த பிறகு மற்றவர்களுக்கு போடப்படும் எனவும் ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்