கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்.12-ல் 800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்!

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்.12-ல்  800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி 800-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ முதலமைச்சர் ஆணைக்கிணங்க வரும் 12ஆம் தேதி அன்று மாநிலம் தழுவிய மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப மையம், அரசு மருத்துவமனைகளில் என 800-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்.12-ல்  800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்!

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் அரசு மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயனடைய உள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப்.12-ல்  800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்!

மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திகொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்து 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார்.