1 கோடியே 10 லட்சம் பேர்: இந்த மூன்று நாடுகளின் மொத்த பாதிப்பு #CoronaUpadates
கொரோனா போல ஒரு பேரிடரை இந்த உலகம் இதற்கு முன் சந்திந்திருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு தீராத தலைவலியாக மாறியிருக்கிறது கொரோனா. வல்லரசு நாடுகளே கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் தவிக்கின்றன.
ரஷ்யா நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி கண்டறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய (ஆகஸ்ட் 14) காலை நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 10 லட்சத்து 68 ஆயிரத்து 345 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 4 நாட்களுக்குள் 10 லட்சம் அதிகரித்து விட்டது.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 838 நபர்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 57 ஆயிரத்து 440 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.
தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 63 லட்சத்து 91 ஆயிரத்து 069 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.
கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 54 லட்சத்து 15 ஆயிரத்து 666 பேரும், பிரேசில் நாட்டில் 32 லட்சத்து 29 ஆயிரத்து 621 பேரும் இந்தியாவில் 24 லட்சத்து 59 ஆயிரத்து 613 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய 3 நாடுகளின் மொத்தப் பாதிப்பைக் கூட்டினால் 1 கோடியே 10 லட்சத்தை விட அதிகமாக வருகிறது.
நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.
அமெரிக்காவில் 55,364 பேரும், பிரேசிலில்59,147 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 64,142 பேராக அதிகரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மெக்சிகோ நாட்டிலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேபோல நேற்றைய நிலவரப்படி அதிக எண்ணிக்கையில் மரணம் அடைபவர்களில் பிரேசில் நாட்டில்தான் அதிகம்.