பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்!

 

பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியனது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்!

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டதால் அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.