வெப்பமானி மூலம் மற்றவர்களை பரிசோதித்து வந்த ஊழியருக்கு கொரோனா!
Jul 15, 2020, 09:06 IST1594784194000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 79,662 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வெப்பமானி மூலம் மற்றவர்களை பரிசோதித்து வந்த ஊழியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.