அயோத்தியில் பிரதமருடன் இருந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா!

 

அயோத்தியில் பிரதமருடன் இருந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா!

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின் போது மேடையில் பிரதமர் மோடியுடன் அமர்ந்திருந்த ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மகத் நிர்த்திய கோபால் தாசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அயோத்தியில் பிரதமருடன் இருந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா!
அயோத்தியில் கடந்த ஐந்தாம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கொரோனாத் தொற்று ஏற்படாமல் இருக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மகத் நிர்த்திய கோபால் தாசுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

அயோத்தியில் பிரதமருடன் இருந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா!
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பூஜையின் போது பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆத்தியநாத், மோகன் பகவத் உள்ளிட்டவர்களுடன் இவர் நெருக்கமாக இருந்தார்.

அயோத்தியில் பிரதமருடன் இருந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா!
முன்னதாக அயோத்தி கோவில் தலைமை அர்ச்சகர் பிரதீப் தாஸ், 14 போலீசாருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில் இவருக்கு தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.