அமைச்சர் நிலோபர் கபில், மகன், மருமகனுக்கு கொரோனா!- வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

 

அமைச்சர் நிலோபர் கபில், மகன், மருமகனுக்கு கொரோனா!- வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

அமைச்சர் நிலோபர் கபில், மகன், மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சர் நிலோபர் கபில், மகன், மருமகனுக்கு கொரோனா!- வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வருகையில் அதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கெனவே அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் நிலோபர் கபில். சில நாட்களாக அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார். கடந்த 14-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அமைச்சர் நிலோபர் கபில், மகன், மருமகனுக்கு கொரோனா!- வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைஇதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன், அவர் மருத்துவ கண்காணிப்பிலும் இருந்து வருகிறார். அமைச்சர் நிலோபர் கபிலின் மகனும் டாக்டருமான இத்ரீஷ்கபில் (45) மற்றும் மருமகன் முகமது காசிப் (40) ஆகியோர் வாணியம்பாடியில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, அமைச்சரின் மகனுக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் அமைச்சரின் வீடு இருக்கும் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.