கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா!- அவரே வெளியிட்ட தகவல்

 

கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா!- அவரே வெளியிட்ட தகவல்

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமாவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

கொரோனாவால் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆளுநர் புரோகித்துக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “அறிகுறிகள் இல்லை என்றும், வீட்டில் தனிமையில் இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ வழிமுறைகளை பின்பற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.