காரைக்கால் ஆட்சியர் அர்ஜூன் ஷர்மாவிற்கு கொரோனா

 

காரைக்கால் ஆட்சியர் அர்ஜூன் ஷர்மாவிற்கு கொரோனா

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் ஷர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சியரின் சமையலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. இதையடுத்து ஆட்சியர் குடும்பத்தினர் உட்பட அலுவலகத்தில் பணி புரிந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். பரிசோதனையில் ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலில் இதுவரை 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 148 பேர் குணமடைந்து வீடு திரும்யிருக்கின்றனர். என்று காரைக்கால் நோய்த்தடுப்பு துணை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.