எடியூரப்பா மகளுக்கும் கொரோனா!

 

எடியூரப்பா மகளுக்கும் கொரோனா!

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அம்மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில்வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா(வயது77) அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகள் நடத்திவந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து, தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று டிவிட்டர் பதிவு மூலமாக கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், எடியூரப்பாவை தொடர்ந்து, அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.