திமுக எம்.எல்.ஏ சேகர் பாபுவுக்கு கொரோனா!

 

திமுக எம்.எல்.ஏ சேகர் பாபுவுக்கு கொரோனா!

சென்னை துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ சேகர் பாபுவுக்கு கொரோனா!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக எம்எல்எல் சேகர் பாபு தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட பயணங்களின் போது அவருடன் தொடர்ந்து பயணித்து வந்த அவர், உதயநிதி கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து நடத்தி கொடுத்து வந்தார்.

திமுக எம்.எல்.ஏ சேகர் பாபுவுக்கு கொரோனா!

இந்த சூழலில் எம்எல்ஏ சேகர் பாபு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே கொரோனா 2 ஆம் அலை பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.