மத்திய நீர் ஆற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங்குக்கும் கொரோனா!

 

மத்திய நீர் ஆற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங்குக்கும் கொரோனா!

மத்திய நீர் ஆற்றல் (ஜல் சக்தி) துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்பட பலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது.

மத்திய நீர் ஆற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங்குக்கும் கொரோனா!

பலரும் நலமடைந்து பணிக்குத் திரும்பி வருகின்றனர். அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராது என்று கூறியருவருக்கு கூட கொரோனா வந்தது.
இந்த நிலையில் மத்திய நீர் ஆற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று ட்விட்டரில்

தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், “கொரோனா அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன். அதில் இன்று முடிவு வந்துள்ளது. எனக்கு கொரோனா பாஸிடிவ் உறுதியாகி உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனை படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

மத்திய நீர் ஆற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங்குக்கும் கொரோனா!
கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தாங்களே சுய தனிமைப்படுத்திக்கொள்ள, பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் நலமாக இருப்பீர்கள் நம்புகிறேன், உங்களை நீங்கள் கவனித்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.