பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் கொரோனா! – கந்த சஷ்டியோடு தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்

 

பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் கொரோனா! – கந்த சஷ்டியோடு தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்

தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக ட்வீட் வெளியிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க துணைத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் நயினார்

பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் கொரோனா! – கந்த சஷ்டியோடு தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்

நாகேந்திரன். தனக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் அவர் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்சி மாறுவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவரை சமாதானம் செய்ய தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் தொடங்கி பலரும் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

http://


இந்த நிலையில் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் அதனால் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனை படியும், என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன்! வேலுண்டு வினையில்லை!” என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் கொரோனா! – கந்த சஷ்டியோடு தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்
பலரும் அவர் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று செயல்படுங்கள், பா.ஜ.க தலைவர்கள் கூறுவது போன்று கோமியம் , மந்திரம், அப்பளம் என்று இருந்து விபரீதத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி பா.ஜ.க முன்னணி தலைவர்கள் பலருக்கு தற்போது கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க துணைத் தலைவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.