அதிமுக பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
Sep 27, 2020, 11:49 IST1601187581000
சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு நாளை நடக்கும் நிலையில் எடுக்கப்பட்ட சோதனையில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே துணை முதல்வர் ஓபிஎஸுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.