“சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை” : வெளியான புதிய தகவல்!

 

“சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை” :  வெளியான புதிய தகவல்!

சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை” :  வெளியான புதிய தகவல்!

4 ஆண்டுகாலமாக சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா இன்று விடுதலையாகியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சிறைத்தண்டனை முடிந்து இன்று விடுதலையாகியுள்ளார். இருப்பினும் விடுதலைக்கு முன்பாக கடந்த 20 ஆம் தேதி உடல்நல குறைவால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா உடல்நிலை தற்போது சீராக உள்ள நிலையில் அவருக்கு தொற்று ம் குறைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

“சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை” :  வெளியான புதிய தகவல்!

இந்நிலையில் கொரோனா தொற்று இல்லாத நிலை 3 நாட்கள் தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி சசிகலா வீடு திரும்புவார் என்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நிலையில் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று வந்தால் 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆக்சிஜன் உதவி இன்றி சுவாசிக்கும் நிலை தொடர்ந்து 3 நாட்களில் சசிகலா வீடு திரும்புவார் என்றும் விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெற குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.