யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

 

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு
கோவிட்-19 தொற்று இருப்பது 3.6.2021 அன்று ஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றில் 9 வயதுள்ள நீலா என்ற பெண் சிங்கம் 3.6.2021 அன்று கொரோனாவால் இறந்தது. ஹைதராபாத் உயிரியல் பூங்கா, ஜெய்பூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கும் முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 சிங்கம் மற்றும்
4 புலிகளின் மாதிரிகள் ஆய்வுக்காக பரோலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

வண்டலூரில் 11 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் முதுமலை, டாப்சிலிப் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவக்குழு நாளை உதகை செல்வதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.