இதுவரை சென்னையில் 35% பேருக்கு கொரோனா பரிசோதனை!

 

இதுவரை சென்னையில் 35% பேருக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை மக்கள் தொகையில் இதுவரை 35% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடமாடும் மருத்துவ முகாம்களை அமல்படுத்தியது. அதன் படி, குடியிருப்பு பகுதிகளுக்கே என்று கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த அக்.6 ஆம் தேதி வரையில் சென்னை மருத்துவ முகாம்களில் 28,71,934 பேர் கலந்து கொண்டதாக குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை சென்னையில் 35% பேருக்கு கொரோனா பரிசோதனை!

மொத்தமாக எடுக்கப்பட்ட 1,61,494 மாதிரிகளில் இருந்து 26,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கொரோனா உறுதியாகும் விகிதம் 16% ஆக இருப்பதாகவும் தேனாம்பேட்டை மற்றும் திரு.வி.க நகரில் அதிகமான மக்கள் முகாம்களில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேர் முகாம்களில் கலந்து கொண்ட நிலையில், அது தற்போது 13 ஆயிரமாக குறைந்திருப்பதாகவும் குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.