புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

 

புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை நவம்பர் வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டதைப் போல, புதுச்சேரியிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு 5.0-வில் தமிழகத்தை போலவே, புதுச்சேரியிலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் 50 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் அதற்கு கூடுதலாக 25% கொரோனா வரியும், புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்துக்கும் 20% கொரோனா வரியும் விதித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

இந்நிலையில், புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை அடுத்த மூன்று மாதத்திற்கு அதாவது நவம்பர் வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.