கொரோனா அறிகுறிகள் இது தான்…செய்ய வேண்டியவை உங்கள் கவனத்திற்கு…!

 

கொரோனா அறிகுறிகள் இது தான்…செய்ய வேண்டியவை உங்கள் கவனத்திற்கு…!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக 4,086 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரேநாளில் 80 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 13,475 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா அறிகுறிகள் இது தான்…செய்ய வேண்டியவை உங்கள் கவனத்திற்கு…!

இந்நிலையில் உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லுங்கள் அல்லது பரிசோதனை மையத்தை நாடி ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். ஆர்டிபிசிஆர் முடிவு கிடைக்கும் வரை உங்களை நீங்களே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள்.

கொரோனா அறிகுறிகள் இது தான்…செய்ய வேண்டியவை உங்கள் கவனத்திற்கு…!

கொரோனா பாசிட்டிவ் என்று வந்தால் ரத்த பரிசோதனை சிடி ஸ்கேன் செய்ய வேண்டும். ரத்த ஆக்சிஜன் அளவை கண்டறிய குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி நிச்சயம் வைத்திருக்க வேண்டும்.கொரோனா அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதாக தெரிந்தால் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஆக்சிஜன் அளவு 90 க்கும் கீழ் குறைந்தால் நோயாளிக்கு ஆக்சிஜன் தேவை அவசியம் உள்ளது. ஆக்சிஜன் அளவு 90 க்கு மேல் இருந்தால் வீட்டிலேயே உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்ளலாம்.