1 லட்சத்தை நெருங்கும் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை!

 

1 லட்சத்தை நெருங்கும் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை!

அக்டோபர் 02-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 499 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 56 லட்சத்து 77 ஆயிரத்து 951 நபர்கள்.

1 லட்சத்தை நெருங்கும் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 27 ஆயிரத்து 780 பேர்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 77,89,768 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 74,94,671 பேரும், இந்தியாவில் 63,97,896 பேரும், பிரேசில் நாட்டில் 48,49,229 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

1 லட்சத்தை நெருங்கும் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை!

இது இன்றைய நிலை. நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 47,389 பேரும், பிரேசிலில் 35,643 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 81,693 பேராக அதிகரித்துள்ளனர். இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகளவில் உள்ளது.

1 லட்சத்தை நெருங்கும் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை!

நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம். அமெரிக்காவில் 920, பிரேசிலில் 805, இந்தியாவில் 1,096 பேரும் நேற்று இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 99,804 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். அநேகமாக இன்று மாலை வெளியாகும் அறிக்கையில் 1 லட்சத்தைத் தொட்டு விடலாம்.