40 லட்சத்தை நெருங்கும் பிரேசில்… பின்தொடரும் இந்தியா #CoronaUpdate

 

40 லட்சத்தை நெருங்கும் பிரேசில்… பின்தொடரும் இந்தியா #CoronaUpdate

கொரானா நோய்த் தொற்றின் பாதிப்பு சில நாடுகளில் குறைந்தாலும், பல நாடுகளில் கடுமையான தாக்கமே நிலவுகிறது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் நோய்த் தொற்றும் வேகமும், இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகின்றன.

செப்டம்பர் 02-ம் தேதி காலை நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவினா ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களைப் பார்ப்போம். 

40 லட்சத்தை நெருங்கும் பிரேசில்… பின்தொடரும் இந்தியா #CoronaUpdate

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 59 லட்சத்து  741 பேர்.  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 81  லட்சத்த்து 93 ஆயிரத்து 632 பேரைக் கடந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 61 ஆயிரத்து 251 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

40 லட்சத்தை நெருங்கும் பிரேசில்… பின்தொடரும் இந்தியா #CoronaUpdate

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 68,45,858. இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 62,57,571 பேரும், பிரேசில் நாட்டில்  39,52,790 பேரும் இந்தியாவில் 37,66,108 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்றைக்குள் பிரேசில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துவிடும் போலிருக்கிறது. பிரேசிலை விரட்டிக்கொண்டு இந்தியா போகிறது.

40 லட்சத்தை நெருங்கும் பிரேசில்… பின்தொடரும் இந்தியா #CoronaUpdate

 

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

நேற்று மட்டும் 78,169 பேர் புதிய நோயாளிகளாக இந்தியாவிலும், பிரேசிலில் 41,889 பேரும், அமெரிக்காவில் 41,979  பேரும் அதிகரித்திருக்கின்றனர்.

கடந்த இரு வாரங்களாக, அமெரிக்கா, பிரேசில் நாடுகளின் புதிய நோயாளிகள் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் பெருமளவு அதிகரித்து வருகிறது. நேற்றைய அதிகரிப்பை வைத்து பார்த்தாலே கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் இந்தியாவில். அதனால், பிரேசிலையே முந்திச் செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம். அப்படிச் செல்லும்போது உலகளவில் இரண்டாம் இடத்திற்குச் சென்றுவிடும்.

40 லட்சத்தை நெருங்கும் பிரேசில்… பின்தொடரும் இந்தியா #CoronaUpdate

நாடு முழுக்க அறிவிக்கப்பட்டிருந்த லாக்டெளனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதைபோல தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உலகளவில் பார்க்கும்போது புதிய நோயாளிகள் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து இந்தியாவே முதல் இடத்தில் இருக்கிறது.