பரிசோதனை 6 மடங்கு அதிகரித்துள்ளது; 3 நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

 

பரிசோதனை 6 மடங்கு அதிகரித்துள்ளது; 3 நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டுமே 88,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதே போல அங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.

பரிசோதனை 6 மடங்கு அதிகரித்துள்ளது; 3 நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரிசோதனையை 6 மடங்கு உயர்த்தியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்றும் கொரோனாவில் இருந்து 70% பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் 3 நாட்களில் பாதிப்பு குறையும் என்றும் கூறியுள்ளார்.