சென்னை காவலர்கள் மூலம் அவர்களது குடும்பத்தினர் 20 பேருக்கு கொரோனா உறுதி!
May 22, 2020, 14:32 IST1590138162000
இந்நிலையில், சென்னை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் அவரது குடும்பம் என 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாசப்பிரகாஷ் அருகே உள்ள ரயில்வே காவலர் குடியிருப்பில் வசிக்கும் 3 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக அவரது குடும்பதினர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பொதுமக்கள், குடியிருப்பில் எந்த விதமான நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.