குறைந்து வரும் கொரோனா: ஒரே நாளில் 36,604 பேர் மட்டுமே பாதிப்பு!

 

குறைந்து வரும் கொரோனா: ஒரே நாளில் 36,604 பேர் மட்டுமே பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 94,99,414 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும், 501 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,38,122 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை கொரோனாவில் இருந்து 89,32,647 பேர் மீண்டதால் 4,28,644 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்து வரும் கொரோனா: ஒரே நாளில் 36,604 பேர் மட்டுமே பாதிப்பு!

கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை வீசி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் உத்திர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.