நாடு முழுவதும் 87.18 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!

 

நாடு முழுவதும் 87.18 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 93,09,788 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பஞ்சாப், உத்திர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாவட்டங்கள் காலவரையற்ற இரவு நேர முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்குவதால், மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் செயல்படுமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் 87.18 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!

கடந்த 24 மணி நேரத்தில் 43,082 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 93,09,788 ஆக அதிகரித்துள்ளது. அதே போல ஒரே நாளில் 492 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,35,715 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவில் இருந்து 87,18,517 பேர் குணமடைந்ததால் தற்போது 4,55,555 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.