‘குறைந்து வரும் கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 563 பேர் உயிரிழப்பு!

 

‘குறைந்து வரும் கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 563 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘குறைந்து வரும் கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 563 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் குறைந்து வருவதும் குணமடைவோர் விகிதம் அதிகரிப்பதும் மத்திய அரசு வெளியிடும் தகவலின் படி, தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அருவுறுத்தப்பட்டு வருகிறது.

‘குறைந்து வரும் கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 563 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 48,648 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 80,88,851 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 563 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,21,090 ஆக உயர்ந்துள்ளதாகவும் 57,386 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுவரை கொரோனாவில் இருந்து 73,73,375 பேர் மீண்டதால் தற்போது 5,94,386 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.