கொரோனா தடுப்பு நடவடிக்கை : மதுரையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு !

 

கொரோனா தடுப்பு நடவடிக்கை : மதுரையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு !

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை : மதுரையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு !

மதுரையில் இன்று மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,103 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,677 ஆக உள்ள நிலையில் 138 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை : மதுரையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு !

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆய்வு நடந்தது. அப்போது மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது, “மதுரையில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் இங்கு இதுவரை மதுரையில் இதுவரை 4,534 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்றார்.