கொரோனா பரிசோதனையில் ‘தவறான முடிவு’ : அதிர்ச்சியில் உறைந்த மெகா ஸ்டார்!

 

கொரோனா பரிசோதனையில் ‘தவறான முடிவு’ : அதிர்ச்சியில் உறைந்த மெகா ஸ்டார்!

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா பாசிடிவ் என வந்தது தவறான பரிசோதனையின் முடிவு என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா பரிசோதனையில் ‘தவறான முடிவு’ : அதிர்ச்சியில் உறைந்த மெகா ஸ்டார்!

கடந்த 9 ஆம் தேதி தனக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தெரிவித்திருத்தார். ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அக்கறையோடு கூறியிருந்தார். இதனால் சிரஞ்சீவி விரைவில் தொற்றில் இருந்து மீண்டு வர பலரும் வேண்டுதலும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

கொரோனா பரிசோதனையில் ‘தவறான முடிவு’ : அதிர்ச்சியில் உறைந்த மெகா ஸ்டார்!

இந்நிலையில் சிரஞ்சீவிக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், எனக்கு மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு வெவ்வேறு பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. தவறான ஆர்டி பிசிஆர் கிட் காரணமாக கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்ட பலருக்கும் தவறான முடிவு வந்ததாகவும், பிசிஆர் கிட் பரிசோதனை காரணமாக பாசிடிவ் என்று காட்டியபின் மீண்டும் நெகட்டிவ் என்று வந்ததாக சமூக வலைதளங்களில் பரவின. ஆனால் அது உண்மையில் உச்ச நட்சத்திரம் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது புருவத்தை உயர்த்துகிறது.