ஈரோட்டில் 37 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு!

 

ஈரோட்டில் 37 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு!

ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 37 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு இருந்தது.

சென்னையில் மேலும் 786பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை14,753 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கடந்த 37 நாட்களாக கொரோனா தொற்று ஒருவருக்கு கூட பாதிக்கப்படாத நிலையில் கவுந்தப்பாடி சேர்ந்த ஒருவர் அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஈரோட்டில் 37 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு!

மார்ச் மாதம் தாய்லாந்தை சேர்ந்த இருவருக்கு ஈரோட்டில் கொரோனா உறுதியானதை அடுத்து அங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது.அதன் பிறகு பல்வேறு கட்டங்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கடந்த 37 நாட்களாக ஈரோட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் இன்று மீண்டும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.