திருவாரூரில் கொரோனா பாதிப்பு 600ஐ கடந்தது : நெல்லையில் தொற்று எண்ணிக்கை 1205 ஆக அதிகரிப்பு!

 

திருவாரூரில் கொரோனா பாதிப்பு 600ஐ கடந்தது : நெல்லையில் தொற்று  எண்ணிக்கை 1205 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது.

திருவாரூரில் கொரோனா பாதிப்பு 600ஐ கடந்தது : நெல்லையில் தொற்று  எண்ணிக்கை 1205 ஆக அதிகரிப்பு!

நேற்று மட்டும் 61 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூரில் கொரோனா பாதிப்பு 600ஐ கடந்தது : நெல்லையில் தொற்று  எண்ணிக்கை 1205 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில் திருவாரூரில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதியானதால் பலி எண்ணிக்கை 601 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 2 பயிற்சி மருத்துவர், 2 செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லையில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1205 ஆக அதிகரித்துள்ளது.