பிரபல ஜவுளி கடையில் 20-ற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!?

 

பிரபல ஜவுளி கடையில் 20-ற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது.

பிரபல ஜவுளி கடையில் 20-ற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!?

இந்நிலையில் திருச்சியின் பிரபல ஜவுளி கடையான சாரதாஸ் கடையில் பணியாற்றி வந்த ஊழியர்கள், 20க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதன்காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கடையை பூட்டினர். மேலும் அங்கு சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.