சென்னையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்..பலருக்கு கொரோனா பரவும் அபாயம்!

 

சென்னையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்..பலருக்கு கொரோனா பரவும் அபாயம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 14,000ஐ நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். இதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம் அமல்படுத்த பட்டுள்ளது. அதன் மூலம், அதிகமாக கொரோனா பரவும் 33 பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்..பலருக்கு கொரோனா பரவும் அபாயம்!

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோடிவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அயனாவரத்தை சேர்ந்த 55 வயதான அந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று காலை அவர் தப்பியோடியதால், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அந்த நபர் மூலம் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.