புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு!

 

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 286 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் அதிகபட்சமாக ஒரே நாளில் 7பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 182 நபர்கள் புதுச்சேரியிலும், 21 பேர் காரைக்காலையும், 80 பேர் ஏனாம் பிராந்தியத்தையும், மாஹேவை சேர்ந்தவர்கள் 3 நபர்களுக்கு அடங்குவர். இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பதிப்பு 4,432 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1721 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 2,646 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 4பேரும், ஏனாத்தில் 3பேரும் என இன்று உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு!

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி அனிதா. இவர்களது ஒன்றரை மாதம் குழந்தை தர்ஷன். 3 பேருக்கும் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யபட்டது. முடிவில், 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து மகேந்திரன் தனது மனைவி, பிள்ளையுடன் தலைமறைவு ஆனார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.