கொரோனா பாதித்த பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

 

கொரோனா பாதித்த பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

சென்னை அருகே கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த பெண் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும், கிட்டத்தட்ட 5 மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனிடையே கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் அதனை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதித்த பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐடி ஊழியர் தனது மனைவியை காண முடியாததால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவ்வாறு பல சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை மதுரவாயிலில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் செல்வி, மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனை அறிந்த அதிகாரிகள், அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மாடியில் இருந்து குதித்ததால் படுகாயம் அடைந்த செல்வி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வாட்டரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.