அதிகரிக்கும் கொரோனா : முதல்வர் தலைமையில் திடீர் ஆலோசனை!!

 

அதிகரிக்கும் கொரோனா : முதல்வர் தலைமையில் திடீர் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா : முதல்வர் தலைமையில் திடீர் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ஒரேநாளில் 6,618 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 33ஆயிரத்து 434ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா : முதல்வர் தலைமையில் திடீர் ஆலோசனை!!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் கொரோனா பரவலை கருத்தில் தமிழக அரசு தேர்தல் ஆணையத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை வைத்தது. கோரிக்கையை ஏற்று, தேர்தல் நடத்தை விதிகளில் சில தளர்வுகளை தேர்தல் ஆணையம் அளித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.