எஸ்.பி.பி-க்கு கொரோனா நெகடிவ் – மகன் சரண் மகிழ்ச்சி!

 

எஸ்.பி.பி-க்கு கொரோனா நெகடிவ் – மகன் சரண் மகிழ்ச்சி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து தற்போது அவருக்கு எக்ஸ்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் எஸ்பிபி உடல்நலம் தேறி மீண்டு வர கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

எஸ்.பி.பி-க்கு கொரோனா நெகடிவ் – மகன் சரண் மகிழ்ச்சி!

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி-க்கு கொரோனா நெகடிவ் – மகன் சரண் மகிழ்ச்சி!

தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கடைசியாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது என்றும் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது எஸ்பிபி-க்கு எந்த மாதியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மறுத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.