ரூ. 2க்கு கொரோனா மருந்து : கிருஷ்ணகிரி மருத்துவரின் மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

ரூ. 2க்கு கொரோனா மருந்து : கிருஷ்ணகிரி மருத்துவரின் மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார். இவர் கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு  மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஆராய்ச்சி கட்டுரைகளுடன் சேர்த்து மனு அனுப்பியிருந்தார். இதன் மீது எந்த பதிலும் அளிக்காத நிலையில் மருத்துவர் வசந்தகுமார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

ரூ. 2க்கு கொரோனா மருந்து : கிருஷ்ணகிரி மருத்துவரின் மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர் வசந்தகுமார் தரப்பில், பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் மருந்து கண்டுபிபிடித்துள்ளதாகவும் இது சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ரூ. 2க்கு கொரோனா மருந்து : கிருஷ்ணகிரி மருத்துவரின் மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவர் வசந்தகுமார் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.