மதுரையில் மேலும் 290 பேருக்கு கொரோனா : 10 ஆயிரத்தை நெருங்கும் தொற்று எண்ணிக்கை!
Jul 25, 2020, 08:59 IST1595647755000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் மேலும் 290 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 9,592 ஆக உயர்ந்துள்ளது. இங்கு ஏற்கனவே 6448 பேர் குணமாகியுள்ள நிலையில் 193 பேர் உயிரிழந்துள்ளனர்.