’தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது’ – டாக்டர் க.குந்தைசாமி விளக்கம்

 

’தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது’ – டாக்டர் க.குந்தைசாமி விளக்கம்

கொரொனாவின் அறிகுறி என்னென்ன என்று வரையறுப்பதே சிக்கலாக இருக்கிறது. ஏனெனில், எந்த அறிகுறிகளும் தென்படா விட்டாலும் கொரோனா பாசிட்டிவ் எனக் காட்டுகிறது. அதனால், கொரோனா எதன்மூலம் பரவும் என்பதில் நிறைய வதந்திகள் உலவுகின்றன. குறிப்பாக தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு நோய்த் தொற்று பரவும் எனும் கருத்து உண்மையல்ல என்று தமிழ்நாடு அரசு பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் க.குழந்தைசாமி என்று விளக்கியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்பதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதித்த தாய் தனது குழந்தைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். அதேபோன்று தாய்க்கு இல்லாமல் குழந்தைக்கு மட்டுமே தொற்று இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.

’தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது’ – டாக்டர் க.குந்தைசாமி விளக்கம்

கர்ப்பிணிகளைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். கர்ப்ப காலத்தில் வழக்கமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்புகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அடிக்கடி வெளியில் செல்லக்கூடாது.

பிரசவ தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன் கர்ப்பிணி கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவசரமாக மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி சேர்ந்து விட்டாலும்கூட அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும்.  குழந்தை பிறந்த பிறகு எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

’தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது’ – டாக்டர் க.குந்தைசாமி விளக்கம்

மேலும், “கொரோனாவுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதம் சோப்பும் தண்ணீரும்தான்.  வீட்டை விட்டு வெளியில் செல்லாவிட்டாலும்கூட ஒரு நாளைக்கு 15-20 முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

பொது இடங்கள் அனைத்திலும் கைகழுவும் வசதியை அரசே ஏற்படுத்தி தரவேண்டும். அங்கன்வாடி மையத்தில் டிஜிட்டல் பிபி கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், தொடாமல் உடல் வெப்ப நிலையைப் பார்க்கும் தெர்மல் மீட்டர் ஆகியன வைத்திருப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இவற்றை நன்கொடையாகவோ அல்லது பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புடைமை நிதி மூலமோ வாங்கலாம்.

’தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது’ – டாக்டர் க.குந்தைசாமி விளக்கம்

அனைவருமே பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்காணித்துக் கொள்ளலாம். நார்மல் அளவான 100-95 என்பதற்குக் குறைந்தால் உடனடியாக மருத்துவமனை சென்றுவிட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.