மதுரையில் 9 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா! அச்சத்தில் மக்கள்!

 

மதுரையில் 9 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா! அச்சத்தில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,849 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் 9 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா! அச்சத்தில் மக்கள்!

நேற்று மட்டும் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 89,561 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

மதுரையில் 9 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா! அச்சத்தில் மக்கள்!

இந்நிலையில் மதுரையில் மேலும் 210 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,915 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அந்த மாவட்டத்தில் 5,515 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் 174 பேர் பலியாகியுள்ளனர்.