திருவாரூரில் காவல் துணை கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி!
Jul 31, 2020, 09:10 IST1596166806000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,864 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,39,,978 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 98,767பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூரில் மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருவாரூரில் மேலும் 28 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு பாதிப்பு 1,693 ஆக அதிகரித்துள்ளது.