`போற போக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போய்விட்டது!’- வடிவேலு பாணியில் செல்லூர் ராஜு காமெடி

 

`போற போக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போய்விட்டது!’- வடிவேலு பாணியில் செல்லூர் ராஜு காமெடி

“போற போக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போய்விட்டது” என்று நடிகர் வடிவேலு பாணியில் அமைச்சர் செல்லூர் ராஜு காமெடியாக கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் களத்தில் இறங்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும், நிவாரணப் பணிகளிலும் களமிறங்கியுள்ளனர். அமைச்சர்கள் அன்பழகன், செல்லூர் ராஜு, தங்கமணி மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, சென்னையில் இருந்து மதுரை வந்துள்ளார். அவருக்கு மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாநகர மாவட்ட அலுவலகத்தில் வைத்து தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கோரிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, போற போக்கில கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு” என்று வடிவேலு பாணியில் நகைச்சுவையாக கூறினார்.