8000 -க்கும் அதிகமான புதிய நோயாளிகள்! ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

 

8000 -க்கும் அதிகமான புதிய நோயாளிகள்! ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று அறியப்பட்டது. அது நாளடைவில் உலகம் முழுவது பரவத் தொடங்கி விட்டது, கொரோனா நோய்த் தொற்றல் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை வாட்டி எடுக்கிறது. மார்ச் மாத இறுதி முதல் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது.இதை ஒட்டி நோய்த் தொற்றுவது கட்டுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மாறாக நாள்தோறும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

8000 -க்கும் அதிகமான புதிய நோயாளிகள்! ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தொடக்கத்தில் ஆந்திராவில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதும் அம்மாநில அரசு உஷாரானது. உடனே களத்தில் இறங்கி பாதுகாப்பு அம்சங்களை விரைவு படுத்தியது. அதனால், ஆந்திராவில் ஓரளவு கட்டுக்குள் இருந்தது கொரோனா. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக ஆந்திராவிலும் கோரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் வேகம் உயர்ந்துவருகிறது. இன்று ( ஜூலை 24) அன்று அறிவிக்கப்பட்ட நிலவரப்படி ஆந்திராவில் இன்று மட்டும் 8,174 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், ஆந்திர மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 72,711 ஆக அதிகரித்திருக்கிறது.

8000 -க்கும் அதிகமான புதிய நோயாளிகள்! ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இந்திய அளவில் முதலில் விமான நிலையங்கள் அமைந்திருக்கும் மாநகரங்களிலும் அடுத்து நகரங்களிலும் கொரோனா தொற்று பரவிய நிலையில் இன்று கிராமங்களிலும் பரவத் தொடங்கியிருப்பதன் விளைவு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாகச் சொல்லப்படுறது.

இந்திய அளவில் பார்க்கையில் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் பரவி முதல் இடத்தில் மகாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. மூன்றாம் இடத்தில் டெல்லியும் நான்காம் இடத்தில் கர்நாடகாவும் உள்ளன