தமிழகத்தில் 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

 

தமிழகத்தில் 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தின் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. முதல் அலையின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் தொற்று பரவும் அபாயம் அதிகம் ஆனதால் மீண்டும் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன. இதை தொடர்ந்து இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ,கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

பள்ளிக்கு மாணவர்கள் வருகை என்பது கட்டாயமல்ல; பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிக்கல்வித்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பணியாளர்கள் , கல்லூரி மாணவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. அரியலூர் அரசு உதவிபெறும் மகளிர் பள்ளியில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் சக மாணவி ஒருவருக்கு பாதிப்பு உறுதியானது. அத்துடன் தஞ்சை அரசு குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவி ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அரியலூர் பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதியான நிலையில் மாணவி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் வரதராஜன் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கும் கண்டறியப்பட்டது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் படிக்கும் ஒரு மாணவி க்கும் உறுதியான நிலையில், கடலூர் மாவட்டத்தில் 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.இப்படியாக தமிழகத்தின் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது.