திருச்சியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா : அச்சத்தில் மக்கள்!
Jul 26, 2020, 09:20 IST1595735425000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி சிறுகனுர் அருகே ஊட்டத்தூர் கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேருக்கு கொரோனா உறுதியானதால் ஊட்டத்தூர் கிராமம் முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.