பிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு கொரோனா உறுதி!

 

பிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,343 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,392ஆக அதிகரித்துள்ளது.

பிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு கொரோனா உறுதி!

நேற்று மட்டும் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரபல ஜவுளி கடையான ஆர்எம்கேவி கடை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜவுளி கடை மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே நெல்லையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 879 ஆக உயர்ந்துள்ளது.