திருவள்ளூரில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று!
Jul 22, 2020, 12:29 IST1595401144000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 88,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூரில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்று பாதிப்பு 10,208 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பூண்டியில் 71, சோழவரத்தில் 50, ஆர்கே பேட்டையில் 33 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.